600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கேரள அரசு நடத்தவிருக்கும் திரைப்பட விருது வழங்கும் விழாவில் மோகன்லால் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள கூடாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கையெழுத்திட்டுள்ளார் என ஒரு செய்தி நேற்று வெளியானது.. ஆனால் மோகன்லாலுக்கு எதிராக தான் கையெழுத்திடவில்லை என உடனடியாக மறுத்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
ஆனால் மோகன்லாலுக்கு எதிராக இந்த கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ள தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் டாக்டர் பைஜூவோ, பிரகாஷ்ராஜ் கையெழுத்திட்டது உண்மை தான் என கூறியுள்ளதோடு அதில் ஒரு டுவிஸ்ட்டும் வைத்துள்ளார்.
அதாவது தாங்கள் கேரள அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் மோகன்லால் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள கூடாது என எங்கேயும் குறிப்பிடவில்லை என்றும், சிறப்பு விருந்தினராக திரையுலகை சேர்ந்த யாரையும் அழைக்க கூடாது என பொதுவாகவே குறிப்பிட்டிருந்ததாகவும் கூறினார்.
அதனால் தான் நடிகர் பிரகாஷ்ராஜூம் இந்த மனுவில் கையெழுத்திட்டிருந்தாலும், அதில் மோகன்லால் பெயர் இடம்பெறாததால், மோகன்லாலுக்கு எதிராக தான் கையெழுத்து போடவில்லை என தைரியமாக கூறியுள்ளதாக டாக்டர் பைஜூ விளக்கமளித்துள்ளார்.
மேலும், இந்த விஷயத்தில் மோகன்லால் மட்டுமல்ல, அவருக்கு பதிலாக மம்முட்டியை சிறப்பு விருந்தினராக அழைத்தால் கூட நாங்கள் பாரபட்சமின்றி இதேபோல எங்கள் எதிர்ப்பை காட்டுவோம் என்றும் டாக்டர் பைஜூ கூறியுள்ளார்.