பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா. இவர் கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரிராஜா மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். கஸ்தூரிராஜா தன்னிடம் 65 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அந்த கடனுக்கு தனது சம்பந்தியான ரஜினி தான் உத்தரவாதம் என்று கூறி அவர் வாங்கியதாகவும், ஆனால் கடனை திருப்பித்தரவில்லை. அதனால் கஸ்தூரிராஜா மீதும், ரஜினி மீதும் நடவடிக்கை எடுத்து கடனை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று அந்த வழக்கில் போத்ரா குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம் "இந்த வழக்கு சட்டத்தை தவறாக பயன்படுத்தி தொடரப்பட்டுள்ளது. பெயரை தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனிப்பட்ட யாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. சமூகத்தில் பிரபலமாக இருக்கும் ரஜினிகாந்தை சிக்க வைக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது தெரிகிறது. இதுபோன்ற வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தூக்கி எறிய வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்வதுடன் வழக்கு தொடர்ந்த முகுந்த்சந்த் போத்ராவுக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.