'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தன்னுடைய 43-வது பிறந்த நாளை நடிகர் சூர்யா, இருதினங்களுக்கு முன் கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும், தன்னுடைய பிறந்த நாளில், மக்கள் சேவை செய்வதில் ஆர்வமாக இருப்பார் சூர்யா. இந்தாண்டும், தன்னுடைய பிறந்த நாளில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சூர்யா.
அந்த அறிவிப்பில் சூர்யா கூறியிருப்பதாவது : நாடு எவ்வளவோ முன்னேறி விட்டாலும், பல இடங்களில் தேவையான கழிப்பறை வசதிகள் இல்லை. குறிப்பாக, அரசுப் பள்ளிகளின் நிலை படு மோசமாகவே உள்ளது. இப்படிப்பட்ட 400 அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை கண்டுபிடித்து, அதை புதுப்பித்து தர எண்ணியுள்ளேன். அதற்கான பணிகள், விரைவில் துவங்கும். இந்தப் பணிகளை கவனிக்கு ஒரு குழு அமைக்கப்படும்.
கழிப்பறையை கட்டி முடித்து, பயன்பாட்டுக்கு விட்டுள்ள நிலையிலும், கழிவறைக்கான தண்ணியை முழுமையாக வழங்குவதோடு, கழிவறையை புதுப்பித்துத் தர முன்வந்துள்ளேன். கழிவறைகளை புதிதாக கட்டிக் கொடுத்தால் மட்டும் போதாது. அவைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.