'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பிரேமம்' மலையாளப் படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்த ஒரு நடிகையாக மாறினார் சாய் பல்லவி. அவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த “பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. தெலுங்கில் சாய் பல்லவிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது. இருப்பினும் சாய் பல்லவிக்குக் கிடைத்த புகழைத் தாங்கிக் கொள்ள முடியாத யாரோ ஒருவர் தொடர்ந்து அவருக்கு எதிராக சில சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சாய் பல்லவி தற்போது நடித்து வரும் தெலுங்குப் படமான 'படி படி லேச்சி மனசு' படத்தின் நாயகனான சர்வானந்த்துக்கும் அவருக்கும் இடையே படப்பிடிப்பில் பிரச்சினை என சர்ச்சையைப் பரப்பியுள்ளார்கள். ஆனால், படக்குழுவினர் இதை அடியோடு மறுக்கிறார்கள். யாரோ வேண்டுமென்றே சாய் பல்லவிக்கு எதிராக இப்படி ஒரு சர்ச்சையை வேண்டுமென்றே பரவ விடுகிறார்கள் என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஏற்கெனவே, சாய் பல்லவிக்கும் அவருடன் நடித்த தெலுங்கு ஹீரோக்களான நானி, நாக சௌரியா ஆகியோருடன் பிரச்சினை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவி தற்போது தமிழில் 'மாரி 2, என்ஜிகே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.