ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரள அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக மோகன்லால் கலந்துகொள்ள இருக்கிறார் என சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால் இதற்கு திரையுலகை சேர்ந்த ஒரு சாராரிடமும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உட்பட சுமார் 107 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று கேரள முதல்வருக்கு அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் முக்கியமாக நடிகர் பிரகாஷ் ராஜூம் கையெழுத்திட்டுள்ளார் என ஒரு தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
"மோகன்லாலுக்கு எதிராக நான் எப்படி கையெழுத்து போடுவேன்.. அவர் ஒரு லெஜண்ட்.. நம் நாட்டின் சொத்து.. இப்படி ஒரு விஷயமாக யாரும் என்னிடம் எந்த தொடர்பு கொள்ளவே இல்லை.. அதுமட்டுமல்ல இந்த விழா குறித்தும் எனக்கு தெரியாது" என கூறியுள்ள பிரகாஷ்ராஜ், இந்த விஷயத்தில் தான் எப்போதும் மோகன்லால் பக்கம் தான் என கூறியுள்ளார்.
மோகன்லாலுடன் இணைந்து ஒடியன் என்கிற படத்தில் சமீபத்தில் தான் பிரகாஷ்ராஜ் நடித்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.