தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வருடம் பிரபல மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதும், அதில் மலையாள நடிகர் திலீப்பிற்கு தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள திலீப் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நீதிமன்ற அனுமதியுடன் சில சலுகைகளையும் பெற்று வருகிறார். இதனால் திலீப் வழக்கில் தேக்கம் ஏற்பட்டதாக கருதும் கேரள அரசு, உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.
அதில் நடிகை கடத்தல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறும் அதற்கு பெண் நீதிபதி ஒருவரை நியமிக்குமாறும் வேண்டுகோள் வைத்துள்ளது. திலீப் இந்த வழக்கு விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார் எனவும் அதில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது கேரள அரசு.