பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சாமி படத்திற்கு பிறகு விக்ரம் - ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சாமி-2. நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். சூரி காமெடி செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை விழா நேற்று நடை பெற்றது.
இந்த விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது, ஹரியின் இயக்கத்தில் நான் நடிக்கும் முதல் படம் இது. அவரது படப்பிடிப்பு தளம் எப்போதுமே எனர்ஜியாக, பரபரப்பாக இருக்கும். அவரிடமுள்ள அந்த பரபரப்பு அனைவரையுமே தொற்றிக்கொள்கிறது. அதனால், ஒவ்வொருவருமே அவரவர் வேலைகளில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.
முக்கியமாக விக்ரம் சார், தான் மட்டுமின்றி தன்னுடன் நடிப்பவர்களும் நடிப்பில் ஸ்கோர் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் நடிப்பில் அனைவருக்குமே அவர் உதவி செய்கிறார். ஒரே வார்த்தையில் சொன்னால் ஒரு ஆசிரியர் போன்று செயல்படுகிறார் விக்ரம்.