மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ் சினிமாவில் விஸ்வரூப வளர்ச்சியடைந்திருக்கும் ஒரு நடிகர் தான் விஜய் சேதுபதி. ரஜினியுடன் அவரது 165வது படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி, சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சனுடன் நடித்து வருகிறார். ஆக, ஒரே நேரத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி என மூன்று இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் பெருமை பெற்றிருக்கிறார்.
அந்த வகையில், அனைவருக்குமே பிடித்தமான ஒரு நடிகராக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும், பிடிக்காத ஒரு விசயம் உள்ளதாம். அது என்னவென்று அவரைக்கேட்டால், என்னை எதிரில் உட்கார வைத்துக் கொண்டு மானாவாரியாக புகழ்வது சுத்தமாக பிடிக்காது என்கிறார். அதனால் தான் அந்த இடத்தில் என்ன செய்வதென்றே புரியாமல் எதையோ யோசிப்பது போன்று அங்குமிங்கும் பார்த்தபடி சமாளித்துக் கொண்டு அமர்ந்திருப்பேன் என்கிறார் விஜயசேதுபதி.