'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் புதிய 'பாசமலர்' ஆக சூரி, கீர்த்தி சுரேஷ் அவர்களது பாசத்தை வெளிப்படுத்திய சம்பவம் நேற்று நடைபெற்ற 'சாமி ஸ்கொயர்' இசை வெளியீட்டு விழாவில் நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி, “என் அன்புத் தங்கச்சி கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துகள். நாளுக்கு நாள் மெருகேறிட்டே இருக்கீங்க. இந்தப் படத்துல வந்து அண்ணே, சின்ன பன்ச் டயலாக் போட்டு விடுங்க அண்ணேன்னு சொன்னாங்க. நான் போய் டைரக்டர்கிட்ட சொல்வேன், ஓகேன்னு சொல்லிடுவாரு,” என்றார்.
கீர்த்தி சுரேஷ் பேசும் போது சூரியின் அன்புத் தங்கச்சிப் பேச்சுக்கு பதிலளித்துப் பேசினார். “சூரி அண்ணே, ஆரம்பத்துல இருந்து பார்த்துக்கிட்டிருக்கேன். என்னுடைய சொந்த அண்ணன் மாதிரி, வார்த்தைக்கு வார்த்தை நான் அண்ணான்னுதான் கூப்பிடுவேன். இந்தப் படத்துல எனக்கும் அண்ணனுக்கும் நிறைய காம்பினேஷன் இருக்கு,” என்றார்.
இருவரின் அண்ணன், தங்கச்சி 'பாசமலர்' பேச்சைக் கேட்டு விழாவுக்கு வந்தவர்களும் ரசித்து மகிழ்ந்தார்கள்.