சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 25 படங்களுக்கும் மேல் நடித்தவர் நடிகை பூனம் கவுர். விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி 2007ல் வெளிவந்த 'நெஞ்சிருக்கும் வரை' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் கமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்', நாகார்ஜுனா நடித்த 'பயணம்', விஷால் நடித்த 'வெடி', ஷாம் நடித்த '6 மெழுகுவர்த்திகள்' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகி அவர் டுவிட்ரைவிட்டே வெளியேறினார். சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பூனம் கவுர், தெலுங்குத் திரையுலகத்தில் அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை விளக்கினார்.
“ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னுடைய நடிப்பைப் பற்றி பாராட்டி, பிரபல நடிகர்களுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு தருவதாகவும் சொன்னார். அடுத்த வாரம் அவரது அலுலகத்தில் வந்து சந்திக்க அழைத்தார். நான் என்னுடைய அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். ஆனால், நான் அம்மாவுடன் வந்த்தை அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால், அவர் என்னிடம் சரியாகவும் பேசவில்லை. இதுவரையில் அவர் எனக்கு எந்தவிதமான வாய்ப்பையும் வழங்கவில்லை. நடிகைகள், நடிகர்களைப் போல இல்லாமல் நிறைய அவமானங்களையும், அனுபவங்களையும் கடந்து வர வேண்டும்.
டுவிட்டரில் நான் கருத்துக்களை வெளியிட்ட போது எனக்கு ஒருவரும் ஆதரவு தரவில்லை. ஒரு மாதர் சங்கம் கூட எனக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை. என்னுடைய குடும்பம் மட்டுமே எனக்கு ஆதரவாக இருந்தது. தேவையில்லாத சர்ச்சையைத் தொடர வேண்டாம் என்று தான் டுவிட்டரை விட்டே வெளியேறினேன்,” என்றார்.