ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 25 படங்களுக்கும் மேல் நடித்தவர் நடிகை பூனம் கவுர். விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி 2007ல் வெளிவந்த 'நெஞ்சிருக்கும் வரை' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் கமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்', நாகார்ஜுனா நடித்த 'பயணம்', விஷால் நடித்த 'வெடி', ஷாம் நடித்த '6 மெழுகுவர்த்திகள்' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகி அவர் டுவிட்ரைவிட்டே வெளியேறினார். சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பூனம் கவுர், தெலுங்குத் திரையுலகத்தில் அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை விளக்கினார்.
“ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னுடைய நடிப்பைப் பற்றி பாராட்டி, பிரபல நடிகர்களுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு தருவதாகவும் சொன்னார். அடுத்த வாரம் அவரது அலுலகத்தில் வந்து சந்திக்க அழைத்தார். நான் என்னுடைய அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். ஆனால், நான் அம்மாவுடன் வந்த்தை அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால், அவர் என்னிடம் சரியாகவும் பேசவில்லை. இதுவரையில் அவர் எனக்கு எந்தவிதமான வாய்ப்பையும் வழங்கவில்லை. நடிகைகள், நடிகர்களைப் போல இல்லாமல் நிறைய அவமானங்களையும், அனுபவங்களையும் கடந்து வர வேண்டும்.
டுவிட்டரில் நான் கருத்துக்களை வெளியிட்ட போது எனக்கு ஒருவரும் ஆதரவு தரவில்லை. ஒரு மாதர் சங்கம் கூட எனக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை. என்னுடைய குடும்பம் மட்டுமே எனக்கு ஆதரவாக இருந்தது. தேவையில்லாத சர்ச்சையைத் தொடர வேண்டாம் என்று தான் டுவிட்டரை விட்டே வெளியேறினேன்,” என்றார்.