ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய 'சத்யா' படம் தான் சிபிராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான படம். கடந்த வருடம் டிசம்பர் 8-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாகவும், முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்தனர்.
சத்யா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்தப்படத்தைத் தொடர்ந்து வினோத் என்ற அறிமுக இயக்குநர் இயக்கத்தில் 'ரங்கா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சிபிராஜ். நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் சதீஷ் நடித்துள்ளார்.
இந்தநிலையில், புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சிபிராஜ். இந்தப்படத்தை 'மதுபானக்கடை' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த கமலக்கண்ணன் இயக்க இருக்கிறார். சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு கமலக்கண்ணன் இயக்கும் படம் இது.
காதல் மற்றும் ஆக்ஷன் கலவையான இந்தப் படம், கோயம்புத்தூர் பின்னணியில் உருவாகிறது. கோயம்புத்தூர் பின்னணியில் எடுக்கப்பட்ட நாய்கள் ஜாக்கிரதை வெற்றிபெற்றதால் இந்தப்படத்தையும் கோவையில் எடுக்கின்றனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'வட்டம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தை அடுத்து, ஈஸ்வர் கார்த்திக் என்பவரது இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிபிராஜ்.