கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
என்.ஜி.கே. படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை லண்டனில் முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.
சூர்யா உடன் மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, சயிஷா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப்படத்தை தெலுங்கில் பிசினஸ் செய்வதற்காக தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். இப்படத்திலிருந்து அவர் தற்போது விலகியிருக்கிறார்.
“இப்படத்திற்கான தேதிகள் நான் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ள 'ஏபிசிடி' படத்துக்கு கொடுத்த தேதிகளும் க்ளாஷ் ஆகின்றன. ஏபிசிடி படப்பிடிப்பை கேன்சல் பண்ணினால் மீண்டும் நடத்துவது கஷ்டம். அதனால்தான் சூர்யா படத்திலிருந்து விலகினேன்.” என்று அல்லு சிரிஷ் சொன்னாலும், படத்துறையில் யாரும் அதை நம்பத்தயாராக இல்லை.
இயக்குநர் கே.வி. ஆனந்த் சொன்ன கதையில் தனக்கு அதிக வேலை இல்லை என்பதாலேயே இந்த முடிவை அவர் எடுத்ததாகவும், இயக்குநர் கே.வி. ஆனந்த் அவரை கன்வின்ஸ் செய்ய எந்த முயற்சியும் எடுக்காததினால்தான் விலக வேண்டியதாகிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.