போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
என்.ஜி.கே. படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை லண்டனில் முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.
சூர்யா உடன் மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, சயிஷா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப்படத்தை தெலுங்கில் பிசினஸ் செய்வதற்காக தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். இப்படத்திலிருந்து அவர் தற்போது விலகியிருக்கிறார்.
“இப்படத்திற்கான தேதிகள் நான் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ள 'ஏபிசிடி' படத்துக்கு கொடுத்த தேதிகளும் க்ளாஷ் ஆகின்றன. ஏபிசிடி படப்பிடிப்பை கேன்சல் பண்ணினால் மீண்டும் நடத்துவது கஷ்டம். அதனால்தான் சூர்யா படத்திலிருந்து விலகினேன்.” என்று அல்லு சிரிஷ் சொன்னாலும், படத்துறையில் யாரும் அதை நம்பத்தயாராக இல்லை.
இயக்குநர் கே.வி. ஆனந்த் சொன்ன கதையில் தனக்கு அதிக வேலை இல்லை என்பதாலேயே இந்த முடிவை அவர் எடுத்ததாகவும், இயக்குநர் கே.வி. ஆனந்த் அவரை கன்வின்ஸ் செய்ய எந்த முயற்சியும் எடுக்காததினால்தான் விலக வேண்டியதாகிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.