அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன். ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தாதா 87 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலில் களமிறங்கி உள்ள நிலையில் கமலை கடுமையாக விமர்சித்தும், ரஜினியை உயர்வாகவும் கூறி வந்தார். இந்நிலையில் தற்போது இருவரை விட முதல்வர் பழனிசாமி மேல் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனியார் எப்எம்., ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது : ரஜினி, கமல் இருவருமே தங்களின் சுயநலத்திற்காகவே அரசியலுக்கு வருகின்றனர். இருவரும் மக்களுக்கு என்ன செய்தார்கள். கமலை விட ரஜினிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. அவரை கடவுளாகவும் பார்க்கிறார்கள். ரஜினி பா.ஜ., உடன் கூட்டணி வைப்பார், கமல், தமிழக கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். இவர்கள் இருவருக்கும் ஓட்டுப்போடுவதை விட முதல்வர் பழனிசாமியை ஆதரித்தாலே போதும்.
இவ்வாறு சாருஹாசன் கூறியுள்ளார்.