ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன். ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தாதா 87 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலில் களமிறங்கி உள்ள நிலையில் கமலை கடுமையாக விமர்சித்தும், ரஜினியை உயர்வாகவும் கூறி வந்தார். இந்நிலையில் தற்போது இருவரை விட முதல்வர் பழனிசாமி மேல் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனியார் எப்எம்., ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது : ரஜினி, கமல் இருவருமே தங்களின் சுயநலத்திற்காகவே அரசியலுக்கு வருகின்றனர். இருவரும் மக்களுக்கு என்ன செய்தார்கள். கமலை விட ரஜினிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. அவரை கடவுளாகவும் பார்க்கிறார்கள். ரஜினி பா.ஜ., உடன் கூட்டணி வைப்பார், கமல், தமிழக கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். இவர்கள் இருவருக்கும் ஓட்டுப்போடுவதை விட முதல்வர் பழனிசாமியை ஆதரித்தாலே போதும்.
இவ்வாறு சாருஹாசன் கூறியுள்ளார்.