'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் படமாக 'சை ரா' படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதீப், அமிதாப் பச்சன், தமன்னா, ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்திருந்தார்கள். ஐதராபாத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் அந்த அரங்குகள் உடனடியாக சீரமைக்க முடியாத அளவிற்கு சேதமடைந்துவிட்டதாம். அதனால், படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார்கள். இதன் காரணமாக அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரை 30 சதவீத அளவிற்குத்தான் படப்பிடிப்பை முடித்துள்ளார்களாம்.
சரித்திரக் காலப் படம் என்பதாலும், 'பாகுபலி' படங்களை விட பிரமாதமாக எடுக்க வேண்டும் என்பதாலும் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்களாம். தற்போதைய மழை இடையூறு படக்குழுவினரை மிகவும் வருத்தடைய வைத்துள்ளதாம்.
இப்படத்திற்காக ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனரான கிரேக் பாவல் பணியாற்ற உள்ளார். அவர் ஸ்கைபால், ஹாரிபாட்டர், பாஸ்ட் அன்ட் பியுரியஸ் 6 உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியவர்.