தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை மலையாள நடிகர் சங்கம் சங்கத்திலிருந்து நீக்கியது. மோகன்லால் புதிய தலைவர் ஆனதும் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்க பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்ப்பதை கண்டித்து ரம்யா நம்பீசன், மஞ்சுவாரியார், கீது மோகன்தாஸ், பாவனா உள்ளிட்ட 15 நடிகைகள் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்தனர்.
நடிகைகள் பார்வதி, ரேவதி, பத்மப்பிரியா ஆகியோர் இது தொடர்பாக சங்கத்திற்கு கடிதம் எழுதினர். தற்போது திலீப் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் வரை சங்கத்தில் சேர்ப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
அதனால் ராஜினாமா செய்த நடிகைகள் அதனை வாபஸ் பெற வேண்டும் என்று நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக வருகிற ஆகஸ்ட் 7ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு சங்கத்தின் செயலாளர் இடைவேளை பாபு கடிதம் அனுப்பி உள்ளார்.