பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர். ஒரு காலத்தில் பெரிய தயாரிப்பாளராக இருந்தவர். அவரது கடைசி மகன் ஹரிகிருஷ்ண பாஸ்கர். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால் இளையராஜா, கார்த்திக்ராஜா, யுவன்சங்கர் ராஜா, கங்கை அமரன், வெங்கட்பிரபு, பிரேம்ஜி என குடும்பத்தில் பலர் சினிமாவில் இருந்தும் யாரும் ஹரிக்கு உதவில்லை. இதனால் கோபித்துக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று விட்டார். மீண்டும் வந்தபோது யுவன் சங்கர் ராஜா அவருக்காக படம் தயாரிக்க முன்வந்தார். அதுவும் சண்டையில் முடிந்ததால் இலங்கைக்கு சென்று விட்டார் ஹரி.
இப்போது தனது தீவிர முயற்சியால் பேய்பசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு தம்பிக்காக யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அதோடு ஒரு புரமோசன் பாடலுக்கு ஆடியும் கொடுத்திருக்கிறார். நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா குடும்பத்தினர் கலந்து கொண்டு ஹரியை வாழ்த்தினார்கள்.
விழாவில் வெங்கட்பிரபு பேசியதாவது: ஹரி என்னுடைய சகோதரன் தான். எங்கள் குடும்பத்தில் சிறு வயதில் இருந்தே நடிக்க விரும்பியவன். அவனை என் படத்தில் அறிமுகப்படுத்தவில்லை என்று அவனுக்கு என் மேல் கோபம். அதன்பிறகு தனியாக முயற்சித்து ஒரு படத்தில் நடித்து விட்டான். படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்த மாதிரி கதையெல்லாம் சொல்லி, புரிய வைத்து தயாரிப்பாளரை ஒப்புக் கொள்ள செய்வது கஷ்டம். அதை செய்து, விர்ச்சுவல் ரியாலிட்டி கான்செப்டில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் என்றார் வெங்கட் பிரபு
யுவன் சங்கர் ராஜா பேசியதாவது: ஹரிக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். எங்கள் வீட்டில் கோபித்து கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி விட்டான். பின் நானே தயாரிக்க முடிவு செய்தேன், அதன் பின் இலங்கை சென்று விட்டான். தற்போது இந்த படத்தில் நடித்து விட்டான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்று சொன்னான். அன்புக்காக இசையமைத்திருக்கிறேன் என்றார் யுவன் ஷங்கர் ராஜா.