தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல தெலுங்கு நடிகை ரேணு தேசாய். பவன் கல்யாணுடன் நடிக்கும்போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பவன் கல்யாண், ரேணுகா தேசாய் தம்பதிகளுக்கு அகிரா, ஆத்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். ரேணு தேசாய் மும்பையில் உள்ள தன் தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் ரேணு தேசாய் தற்போது ஒருவரை காதலிக்கிறார். அவரை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். ஆனால் ரேணு இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது. செய்ய விடமாட்டோம் என்று பவன் கல்யாண் ரசிகர்கள் மிரட்டி வருகிறார்கள். இதனால் 2வது கணவர் யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்.
ரசிகர்கள் தொடர்ந்து மிரட்டுவதால் ரேணு தனது திருமணத்தை கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நடத்த இருக்கிறார். இது தொடர்பாக ரேணு தேசாய் கூறியிருப்பதாவது: எனது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் கோவையில் உள்ள ஈஷா மையத்தில் எளிமையாக நடைபெறும். அப்போது அன்னதானம் செய்ய இருக்கிறோம். எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் புதிய வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியவில்லை. வருங்கால கணவரை எனது குழந்தைகள் அகிரா, ஆத்யாவுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அவரை தந்தையாக ஏற்றுள்ளனர் என்கிறார் ரேணுதேசாய்.