ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர கேட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தன்னை பயன்படுத்தியவர்கள் ஒரு ரூபாய் கூட தராமல் ஏமாற்றி விட்டனர் என்றார். விரைவில் தமிழகத்தில் குடியேறப் போவதாக தெரிவித்துள்ள அவர் சென்னையில் அளித்த பேட்டி:
பக்திமிக்க குடும்பம்
நான் விஜயவாடாவை சேர்ந்தவள். என் பெற்றோர் ரொம்ப ஆச்சாரமானவர்கள். பக்திமிக்க குடும்பம் எங்களுடையது. என் தந்தை மூன்று கோயிலுக்கு தர்மகர்த்தாவாகவும் உள்ளார். எனக்கு சினிமாவில் எந்த பின்னணியும் இல்லை. நான் லிப்ஸ்டிக், நகபாலீஷ் வைத்தால் கூட வீட்டில் பெற்றோர் திட்டுவர். பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்தேன். அப்போது வந்த வாடிக்கையாளர் ஒருவர் என் அழகை பார்த்து, ஊடகத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
தல ரசிகை
அதனால் பெற்றோர் அனுமதியுடன் ஐதராபாத்தில் வேலைக்கு சேர்ந்தேன். மூன்று ஆண்டுகள் தெலுங்கில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்தேன். அப்போது சூர்யா உள்ளிட்ட நிறைய பேரை பேட்டி எடுத்துள்ளேன். நான் அப்போது சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. இப்போது தல ரசிகை.
பெற்றோரை பிரிந்தேன்
என் தோழிகள் நிறைய பேர், நடிகைகளின் ரசிகையாக இருந்ததை பார்த்தேன். நானும் நடிகையாக முடிவு எடுத்தேன். ஒரு இயக்குனர் என் புகைப்படங்களை பார்த்து நடிக்க வாய்ப்பு தந்தார். 2வது நாயகியாக நடித்தேன். அதன் பின் படங்கள் தொடர்ந்தன. கிளாமர் நடிகையாக பெயர் கிடைத்தாலும், பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. நான் சினிமாவில் நடித்ததால், 10 ஆண்டுகளுக்கு முன்பே என் பெற்றோரை பிரிந்து வந்து விட்டேன்.
படுக்கையை பகிர்வதையே குறி
சினிமாவில் என் திறமையை நிருபிக்க வேண்டும் என விரும்பினேன். வாய்ப்பு வரும் என காத்திருந்தேன். ஆனால் அனைவரும் என்னை படுக்கையில் பயன்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டனர்.
முகத்திரையை கிழிக்க வேண்டும்
அதனால், அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என எண்ணினேன். அத்துடன் அனைத்து துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை இருக்கிறது. இதுகுறித்தும் விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காகவே வெளிப்படையாக இறங்கி வந்துள்ளேன்.
காமப்பார்வை
சாலையில் ஒரு சின்ன பெண் நடந்து சென்றாலும் மற்றவர் பார்வை, காமப்பார்வையாகவே இருக்கிறது. இது மாற வேண்டும். நிறைய பேர் என்னிடம் பட்டியலை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சமூக ஊடகத்தில் 60 லட்சம் பேர் என்னை பின்தொடர்கின்றனர். வெளியே ஒரு கோடிக்கும் மேல் எனக்கு ஆதரவு தருவர். நான் கடந்த ஐந்தாண்டுகளில் நிறைய தொல்லைகளை அனுபவித்துள்ளேன். சிலரின் அமைதியை கலைக்க இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். நடிப்பதற்கு சம்பளம் தருகிறார்கள்; நடிக்கிறோம். அவ்வளவு தானே இதில் எதற்கு மற்றவைக்கு சம்மதிக்க வேண்டும்.