தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜூங்கா படத்தின் மூலம், மூன்றாவது முறையாக, விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ள நடிகை மடோனா சொபாஸ்டினுடன் பேசியதிலிருந்து:
மீண்டும் விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் எப்படி?
விஜய்சேதுபதி, என்னை எப்போதுமே, 'டோனா' என்று தான் அழைப்பார். குறிப்பிட்ட அந்த பாத்திரத்தில், நான் நடிக்க வேண்டும் என, விஜய்சேதுபதி கேட்டார். அவர் கேட்டால் சரியாகத் தான் இருக்கும். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதனால், கதையை கூட கேட்கவில்லை. அவருடன் மூன்றாவது முறையாக நடிப்பது மிகவும் சந்தோஷம்.
'ஜூங்கா' படம் எப்படி?
ஜூங்கா, செமத்தியான பொழுது போக்கு படம். தாதா ரோலில் விஜய்சேதுபதி மிரட்டியுள்ளார். இந்த படம், வேற லெவலில் இருக்கும். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
படத்தில் உங்கள் ரோல்?
ஆந்திர மாநில பெண்ணாக நடிக்கிறேன். காஸ்ட்யூம் உட்பட எல்லாமே கலர்புல்லாக இருக்கும்.
அதிக படங்களில் எதிர்பார்த்தோம் ஆனால்...
எந்த படமானாலும், எனக்கு பிடித்தால் மட்டுமே நடிப்பேன். நல்ல கதைகளாக தேர்வு செய்ய விரும்புகிறேன். இதில், அவசரம் காட்ட விரும்பவில்லை.
எந்த மொழி படங்களுக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்?
மலையாளம் என் தாய்மொழி. அதனால், அதில் நடிப்பது சுலபம். தமிழும், மலையாளமும் ஒரே மாதிரி தான். அதனால் தமிழும் பிரச்னை இல்லை. தெலுங்கு, கன்னட படங்களில் நடிப்பதால், அந்த மொழிகளையும் கற்று வருகிறேன். நடிப்புக்கு மொழி அவசியம் இல்லை. ஆனால், அர்த்தம் தெரிந்து நடித்தால், நல்லது தானே.
'காதலும் கடந்து போகும்' எப்படி உங்களை கடந்து போனது?
மற்ற படங்களை விட, இந்த படத்திற்கு தான் அதிக சிரமம் எடுத்து நடித்தேன். ஆனால், படம் வெளிவந்து சரியாக ஓடவில்லை. இன்னும் நன்றாக போயிருக்கலாம்.
நடிப்பு, நடனம் எது உங்களுக்கு சுலபம்?
எனக்கு கூச்சம் அதிகம். முதல் முறையாக படத்தில் கட்டிபிடித்து நடிக்கும்படி கூறியபோது, அம்மாவுக்கு போன் செய்து அழுதேன். எனக்கு, 'ரொமான்ஸ்' வராது என்பதாலேயே, பல படங்களை இழந்துள்ளேன். உணர்ச்சி மிக்க காட்சிகளில், அந்த பாத்திரமாகவே மாறுவது எனக்கு சுலபம்.
சினிமாவுக்கு வரவில்லை என்றால்...
நடிக்க வரவில்லை என்றால், பாடகி ஆகியிருப்பேன். இல்லையென்றால், 'சைக்காலஜி' படித்திருப்பேன்.
உங்களை தொடர்பு கொள்வதே கஷ்டமாக உள்ளதே?
அந்த, 'இமேஜ்' எப்படி வந்தது என்றே தெரியவில்லை. இதனால் கூட, சில படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது. எனக்கு கிடைக்க வேண்டியது, நிச்சயம் கிடைக்கும். நான் தொடர்பில் தான் இருக்கிறேன்.