மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
மலையாள சினிமாவில் கடந்து முப்பது வருடங்களாக தயாரிப்பாளராக இருந்து வருபவர் சுரேஷ்குமார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சி வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை இவர் தான். ஒரு பேட்டியின்போது, நடிகை வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப் குற்றமற்றவர் என அவருக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார் சுரேஷ் குமார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "திலீப் குற்றமற்றவர். அவரை நான் நூறு சதவீதம் நம்புகிறேன். நான் தயாரித்த படத்தில் அவர் முதன்முறையாக உதவி இயக்குனராக சேர்ந்த காலத்தில் இருந்து அவரை எனக்கு தெரியும். ஒருசிலரால் அவர் இந்த சதியில் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிபி.ஐ விசாரணை வேண்டுமென திலீப் தானாகவே கோரிக்கை வைத்துள்ளதில் இருந்தே அவர் நிரபராதி என்பது தெரியவில்லையா" என கேட்டுள்ளார் சுரேஷ் குமார்.