ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள நடிகர்சங்கத்தில் (AMMA) கடந்த ஒரு மாத காலமாக நடந்து வரும் கலாட்டாக்கள் ஊரறிந்த ரகசியமாகி விட்டன. நடிகை விவகாரத்தில் சிக்கிய திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கும் முடிவை எடுத்தது என நடிகைகள் பலர் போர்க்கொடி தூக்கினர். இதன் அடுத்தகட்டமாக ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உட்பட நான்கு நடிகைகள் மலையாள நடிகர் சங்கத்தை விட்டு விலகினார்கள்.
இப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகைகள் பலரும் சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்கள். நடிகர் சங்கத்தின் நிர்வாக குழுவை கூட்டி திலீப் விஷயம் பற்றி விவாதிக்க வேண்டும் என இந்த அமைப்பிலிருந்து தலைவர் மோகன்லாலுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்தநிலையில் இந்த கோரிக்கைக்கு ஒரு நிபந்தனையுடன் செவி சாய்த்துள்ளது நடிகர் சங்கம். அதாவது தற்போது நடிகர் சங்கத்தில் உள்ள நடிகைகளுடன் இதுபற்றி விவாதிக்க தயார் என்றும், அதேசமயம் பெண்கள் நல அமைப்பு இதில் பங்கேற்க கூடாது என்றும் அதிரடியாக கூறியுள்ளனர்.
இதன்மூலம் சங்கத்தில் தற்போதும் உறுப்பினர்களாக தொடரும் பார்வதி, பத்மப்ரியா, ரேவதி போன்றவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளலாம். ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் போன்ற சங்கத்தில் இருந்து விலகிய நடிகைகளுக்கு அனுமதி இல்லை என்பதை நாசூக்காக வெளிப்படுத்தியுள்ளனர்.