இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள நடிகர்சங்கத்தில் (AMMA) கடந்த ஒரு மாத காலமாக நடந்து வரும் கலாட்டாக்கள் ஊரறிந்த ரகசியமாகி விட்டன. நடிகை விவகாரத்தில் சிக்கிய திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கும் முடிவை எடுத்தது என நடிகைகள் பலர் போர்க்கொடி தூக்கினர். இதன் அடுத்தகட்டமாக ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உட்பட நான்கு நடிகைகள் மலையாள நடிகர் சங்கத்தை விட்டு விலகினார்கள்.
இப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகைகள் பலரும் சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்கள். நடிகர் சங்கத்தின் நிர்வாக குழுவை கூட்டி திலீப் விஷயம் பற்றி விவாதிக்க வேண்டும் என இந்த அமைப்பிலிருந்து தலைவர் மோகன்லாலுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்தநிலையில் இந்த கோரிக்கைக்கு ஒரு நிபந்தனையுடன் செவி சாய்த்துள்ளது நடிகர் சங்கம். அதாவது தற்போது நடிகர் சங்கத்தில் உள்ள நடிகைகளுடன் இதுபற்றி விவாதிக்க தயார் என்றும், அதேசமயம் பெண்கள் நல அமைப்பு இதில் பங்கேற்க கூடாது என்றும் அதிரடியாக கூறியுள்ளனர்.
இதன்மூலம் சங்கத்தில் தற்போதும் உறுப்பினர்களாக தொடரும் பார்வதி, பத்மப்ரியா, ரேவதி போன்றவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளலாம். ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் போன்ற சங்கத்தில் இருந்து விலகிய நடிகைகளுக்கு அனுமதி இல்லை என்பதை நாசூக்காக வெளிப்படுத்தியுள்ளனர்.