‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சமீபத்தில் வெளிவந்த கோலி சோடா இரண்டாம் பாகத்தில் நடித்தவர் க்ரிஷா க்ரூப். இதற்கு முன்பு அழகுகுட்டி செல்லம், கூட்டாளி போன்ற படங்களில் நடித்தாலும் கோலிசோடா 2 தான் அவரை அடையாளம் காட்டியது. தற்போது சுசீந்திரன் இயக்கும் ஏஞ்சலினா படத்தில் ஏஞ்சலினாவாக நடிக்கிறார். ஏஞ்சலினா என் வாழ்க்கையில் முக்கியமான படம் அது முடியும் வரை வேறு படத்தில் நடிக்க மாட்டேன். அதற்காக காத்திருப்பேன் என்கிறார் க்ரிஷா க்ரூப். அவர் மேலும் கூறியதாவது:
பூர்வீகம் மலையாளம், வளர்ந்தது மும்பையில். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக நடிப்பு, நடனம் கற்றுக் கொண்டேன். சில வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் ஒரு படத்தில் அறிமுகமானாலும் சினிமாவை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே விஸ்காம் படித்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்தேன். அந்த மலையாள படத்தை பார்த்துவிட்டுத்தான் அழகு குட்டி செல்லம் பட வாய்ப்பு வந்தது. தொடர்ந்து ஆண்டனி இயக்கத்தில் சாலை என்கிற படத்தில் நடித்தேன் அதன்பின் வந்த வாய்ப்புதான் கோலிசோடா-2
விஜய் மில்டன், என்னை முதலில் அழைத்தது வேறு ஒரு படத்திற்குத்தான். ஆனால் அப்படியே காட்சிகள் மாறி கோலிசோடா-2 படத்தை துவங்கி அதில் என்னை கதாநாயகியாகவும் ஆக்கிவிட்டார். கோலிசோடா முதல் பாகத்துக்கு மிகப்பெரிய ரசிகை நான். அதன் இரண்டாம் பாகத்தில் நான் நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம் தான். எனக்கு அடையாளம் தந்தது கோலிசோடா-2 தான். சுசீந்திரன் இயக்கிவரும் ஏஞ்சலினா படத்தில் டைட்டில் ரோலில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். ஏஞ்சலினா ரிலீஸுக்கு பின்னர்தான் வேறு படங்களை ஒப்புக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன். என்கிறார் க்ரிஷா க்ரூப்.