தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்து விட்டு போன நடிகை காம்னா, அவரை பாய்பிரண்ட் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழில் இதயத்திருடன், மச்சக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை காம்னா ஜெத்மலானி. தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழில் ஏஸ் ராஜா ராணி மற்றும் ஜாக்கி படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த பின்னர், யதார்த்தமாக கடவுள் வெங்கடாஜலபதியை தன்னுடைய பாய்பிரண்ட் என்று கூறியிருக்கிறார். காம்னாவின் இந்த பேச்சு, அவருக்கு எதிராக கிளம்பி இருக்கிறது. கடவுளை பாய்பிரண்ட் என்று கூறியதால் அவருக்கு போன் மூலமாகவும், கடிதம் மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல தரப்பினரின் எதிர்ப்பையடுத்து தன்னுடைய பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கிறார் காம்னா.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நான் யதார்த்தமாகத்தான் சொன்னேன். ஆனால் இவ்வளவு பெரிய பிரச்னையாகும் என்று நினைக்கவில்லை. திருப்பதி வெங்கடாஜலபதியை என்னுடைய தாய்-தந்தையாக, நண்பராக பார்க்கிறேன். அந்த அர்த்தத்தில் தான் அப்படி கூறினேன். ஆனால் அது ஆங்கிலத்தில் பேசும்போது பாய்பிரண்ட் என்றாகிவிட்டது. வெங்கடாஜலபதியை நான் என்னுடைய 5வயது முதல் தரிசனம் செய்து வருகிறேன். அவரை தரிசித்துவிட்டு வந்தால் என் மனதில் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்வு பெருகும். எனக்கு எல்லாமே அவர் தான். பாய்பிரண்ட் என்று நான் கூறிய வார்த்தை, யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார்.