Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருப்பதி வெங்கடாஜலபதியை பாய்பிரண்ட் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய காம்னா...!

14 ஏப், 2012 - 15:53 IST
எழுத்தின் அளவு:

 சமீபத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்து விட்டு போன நடிகை காம்னா, அவரை பாய்பிரண்ட் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழில் இதயத்திருடன், மச்சக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை காம்னா ஜெத்மலானி. தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழில் ஏஸ் ராஜா ராணி மற்றும் ஜாக்கி படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த பின்னர், யதார்த்தமாக கடவுள் வெங்கடாஜலபதியை தன்னுடைய பாய்பிரண்ட் என்று கூறியிருக்கிறார். காம்னாவின் இந்த பேச்சு, அவருக்கு எதிராக கிளம்பி இருக்கிறது. கடவுளை பாய்பிரண்ட் என்று கூறியதால் அவருக்கு போன் மூலமாகவும், கடிதம் மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல தரப்பினரின் எதிர்ப்பையடுத்து தன்னுடைய பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கிறார் காம்னா.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நான் யதார்த்தமாகத்தான் சொன்னேன். ஆனால் இவ்வளவு பெரிய பிரச்னையாகும் என்று நினைக்கவில்லை. திருப்பதி வெங்கடாஜலபதியை என்னுடைய தாய்-தந்தையாக, நண்பராக பார்க்கிறேன். அந்த அர்த்தத்தில் தான் அப்படி கூறினேன். ஆனால் அது ஆங்கிலத்தில் பேசும்போது பாய்பிரண்ட் என்றாகிவிட்டது. வெங்கடாஜலபதியை நான் என்னுடைய 5வயது முதல் தரிசனம் செய்து வருகிறேன். அவரை தரிசித்துவிட்டு வந்தால் என் மனதில் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்வு பெருகும். எனக்கு எல்லாமே அவர் தான். பாய்பிரண்ட் என்று நான் கூறிய வார்த்தை, யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

15 ஏப், 2012 - 10:01 Report Abuse
பார்த்திபன் நாகராஜன் கண்ணனையும் கந்தனையும் காதலிக்காத பெண்கள் உண்டோ ... ? புராணங்களில் வந்தால் மட்டும் சரி ... இப்பொழுது மட்டும் தவறோ ... ?
Rate this:
surya - dubai  ( Posted via: Dinamalar Android App )
14 ஏப், 2012 - 22:38 Report Abuse
surya ஒருவேளை பணக்கார கடவுள் என்பதால் சொல்லியிருக்கலாம்
Rate this:
vschandru610 - namakkal  ( Posted via: Dinamalar Android App )
14 ஏப், 2012 - 17:20 Report Abuse
vschandru610 தரிசனம் பன்னா எனக்கு எல்லா பிரச்சனையும் நீங்கி நிம்மதி் கிடைக்கும்னு சொல்ராங்க அந்தம்மா ஆனா தரிசனம் முடிஞ்சதும் அந்த அம்மாவுக்கு பிரச்சனை வந்து நிம்மதி் போச்சுங்க. எனக்கு ஒரு வெங்காயமும் புரியலிங்க
Rate this:
செல்வா - Muscat,இந்தியா
14 ஏப், 2012 - 16:25 Report Abuse
 செல்வா அப்ப! கேர்ள் பிரெண்ட்...சாமி..........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in