துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம். ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, யுனிவர்சிட்டி, நளதமயந்தி, அழகிய தீயே, ஜெர்ரி, முசக்குட்டி, ராமானுஜன் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார், ஏ காமன் மேன் என்கிற ஆங்கிலப் படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.
ரமேஷ் விநாயகம் புதுமையான முறையில் பாரம்பரிய இசை விழா நடத்துகிறார். அவர் எழுதிய கீர்த்தனைகளை 11 முன்னணி இசை கலைஞர்கள் பாட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கிளாஸ் ஆப் கிளாஸ் என்று தலைப்பு வைத்திருக்கிறார். வருகிற 28ந் தேதி சேத்துப்பட்டு முக்தா வெங்கடசுப்பா ராவ் ஹாலில் நடக்கிறது.
நிகழ்ச்சியில் அருணா சாய்ராம், நித்யஸ்ரீ மகாதேவன், தசிக்கில் குருசரண், அபிஷேக் ரகுராம், உன்னி கிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், காயத்ரி வெங்கட்ராகவன், அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீராம் பரசுராம் மற்றும் திருச்சூர் சகோதரர்கள் ஆகிய 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் பாடுகிறார்கள். இதுகுறித்து ரமேஷ் விநாயகம் கூறியதாவது:
பாரம்பரிய இசை மெட்டுக்கள் மூலம் கதை சொல்லும் பாணியை இந்திய திரையுலகம் மட்டுமே முதலில் கையாள ஆரம்பித்தது. காலப்போக்கில், கதை சொல்லும் யுக்திகள் பல வளர்ந்தாலும், பாடல்கள் என்பது இயக்குனர்களுக்கு எப்போதுமே முக்கிய கருவியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி முதல் பாம்பே ஜெயஸ்ரீ வரை, ஜி.என்.பாலசுப்ரமணியன் முதல் உன்னி கிருஷ்ணன் வரை, என்றும் தனக்கு இணையில்லாத பாபநாசம் சிவன் என எண்ணற்றோர் திரையுலகில் முத்திரை பதித்திருக்கின்றனர்.
ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர், ராகங்களில் அமைந்த இசையில் பாடல்களை உருவாக்கி திரைப்படங்கள அழகுப்படுத்தியிருக்கின்றனர். இப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் கோலோச்சிய இந்த சினிமாவிற்கும், பாரம்பரிய இசைக்குமான உறவினை கொண்டாடுவதே இந்த மூன்று மணி நேர நிகழ்ச்சியின் நோக்கம். என்றார்.