ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சர்கார்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அட்லீ இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்' என இரண்டு படங்களை இயக்கினார் அட்லீ.
'மெர்சல்' படத்துக்கு நெகட்டிவ்வான டாக் இருந்ததால் படம் தோல்வியடையும் சூழல் ஏற்பட்டபோது திடீரென ஏற்பட்ட சர்ச்சையினால் வசூல்ரீதியாகப் பெரும் வெற்றிப்படமாக மாறியது. அதனால் விஜய் - அட்லீ கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக மாறியது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அந்தப்படத்தை அட்லீ இயக்குகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் விஜய் தரப்போ, ஏஜிஎஸ் தரப்போ இந்த செய்தியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.