தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களில் அடுத்த நடிகராக ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பவர் விக்ரம் மகன் துருவ். பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'வர்மா' படம் தான் துருவ் நடிக்கும் முதல் படம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்திற்குப் பிறகு துருவ் நடிக்க உள்ள இரண்டாவது படம் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் நயன்தாரா நடித்த 'நீ எங்கே என் அன்பே' படத்தை இயக்கிய சேகர் கம்முலா துருவ் நடிக்கும் அடுத்த படத்தை தமிழ், தெலுங்கில் இயக்க உள்ளாராம்.
சேகர் கம்முலா இயக்கி கடந்த வருடம் வெளிவந்த 'பிடா' படம் பெரிய வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 'வர்மா' படம் முடிந்த பிறகு இந்த புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா, அல்லது அதற்கு முன்பே வெளியாகுமா, அல்லது வெறும் தகவலுடன் இது கடந்து போகுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.