ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
பொது மேடைகளில் எளிதாக உணர்ச்சி வசப்பட்டு விடுபவர் இயக்குனர் மிஷ்கின்.. அதனால் தானோ என்னவோ எப்போதுமே கருப்பு கண்ணாடி அணிந்து தனது உணர்வுகளை மறைத்துக் கொள்வார்.. ஆனால் என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு, பேசும் வார்த்தைகளில் கோட்டைவிட்டு விடுவார். பேரன்பு பட இசைவெளியீட்டு விழாவிலும் ரேப் என்கிற வார்த்தையை பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார் மிஷ்கின்.
இந்த விழாவில் மம்முட்டியை புகழ்வதாக நினைத்துக் கொண்டு, "மம்முட்டி மட்டும் இந்நேரம் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அவரை நான் ரேப் பண்ணியிருப்பேன்" என கூறியது பெண்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிஷ்கினுக்கு சமூக வலைத்தளங்களில் பெண்கள் அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுபோக மம்முட்டியின் ரசிகர்களும் மிஷ்கினின் இந்த சீப்பான புகழ் வார்த்தைகளை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதையும் சோஷியல் மீடியாவில் பார்க்க முடிகிறது.