தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2013 டிசம்பரில் மலையாள திரையுலகில் சுழன்றடித்த த்ரிஷ்யம்' புயலில் இருந்து தப்பித்த ஒரே மலையாள படம் என்கிற பெருமை ஒரு இந்தியன் பிரணயகதா படத்தை தான் சேரும். பஹத் பாசில் - பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு கூட்டணியில் இந்தப்படம் வெளியானது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்கள்..
இந்தப்படத்திற்கு ஞான் பிரகாசன் என டைட்ட்டில் வைத்துள்ளார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. வழக்கம்போல சத்யன் அந்திக்காடுவின் படங்களில் இருக்கும் அம்சங்கள் இதிலும் குறைவில்லாமல் இருக்குமாம். அதுமட்டுமல்ல இந்தப்படத்திற்கு பிரபல நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் தான் கதை எழுதுகிறாராம். அந்தவகையில் சுமார் 17 வருடங்களுக்கு பிறகு சத்யன் அந்திக்காடுவும் சீனிவாசனும் இணைகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.