கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கடந்த 2013 டிசம்பரில் மலையாள திரையுலகில் சுழன்றடித்த த்ரிஷ்யம்' புயலில் இருந்து தப்பித்த ஒரே மலையாள படம் என்கிற பெருமை ஒரு இந்தியன் பிரணயகதா படத்தை தான் சேரும். பஹத் பாசில் - பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு கூட்டணியில் இந்தப்படம் வெளியானது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்கள்..
இந்தப்படத்திற்கு ஞான் பிரகாசன் என டைட்ட்டில் வைத்துள்ளார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. வழக்கம்போல சத்யன் அந்திக்காடுவின் படங்களில் இருக்கும் அம்சங்கள் இதிலும் குறைவில்லாமல் இருக்குமாம். அதுமட்டுமல்ல இந்தப்படத்திற்கு பிரபல நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் தான் கதை எழுதுகிறாராம். அந்தவகையில் சுமார் 17 வருடங்களுக்கு பிறகு சத்யன் அந்திக்காடுவும் சீனிவாசனும் இணைகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.