'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 6வது சீசனில் பட்டம் வென்றவர் செந்தில் கணேஷ். நாட்டுப்புற கலைஞரான இவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்நிலையில் அதற்கு முன்னதாக சீமராஜா படத்தில் பாட இருக்கிறார் செந்தில்.
"நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷை சீமராஜா படத்தில் பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. இப்படத்தில் நாட்டுப்புற பாடலை அவர் பாடியுள்ளார். யுகபாரதி பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்" என்று இமான் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.