சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி பாலியல் ரீதியான உறவு கொண்டவர்கள் பின்னர் தன்னை ஏமாற்றி விட்டதாக டோலிவுட்டில் உள்ள பல சினிமா பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
இந்த நிலையில், தற்போது அவரது பார்வை கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி என பலரது பெயர்களை வெளியிட்டு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
ஆனால் தெலுங்கு சினிமா உலகில் ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தமிழ் சினிமாவில், எதிர்ப்பு வலுக்கிறது. ஏற்கனவே ஸ்ரீரெட்டி சினிமாத்துறையினர் மீது தவறான குற்றச்சாட்டை சொல்லி வருவதாக நடிகர் விஷால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், தன் மீது ஸ்ரீரெட்டி அபாண்டமாக பழி சொல்வதாக இயக்குனர் சுந்தர்.சியும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பெப்சி தலைவரான டைரக்டர் ஆர்.கே.செல்வமணியும் ஸ்ரீரெட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், யாரோ ஒருத்தர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த சினிமாத்துறையினரையும் களங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டிய விசயம் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டியின் இந்த தொடர் குற்றச்சாட்டுக்கு, விரைவில் சட்டரீதியான நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.