ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரையுலகில் ரொம்பவே பிரபலமான இயக்குனர்கள் தான் ஷபியும் மற்றும் அவரது சகோதரரான ரபி மெக்கார்டின் இருவரும். இவர்கள் பெயர்களும் ஒருவரது படத்தில் இன்னொருவர் உதவியாக பணியாற்றுவதுமாக இருப்பதாலும், கிட்டத்தட்ட ஒரேபோன்று உருவ ஒற்றுமை இருப்பதாலும் இவர்களை ஆரம்பத்தில் சந்திப்பவர்கள் சற்றே குழம்பித்தான் போவார்கள்..
இப்படி ஒரு குழப்பத்தில் தான் பிசாசு நாயகி பிரயாகா மார்ட்டினும் சிக்கினாராம். ராம்லீலா படத்தில் நாயகியாக நடித்தபோது, ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றிய ஷபியை அவரது சகோதரர் ரபி என நினைத்துக் கொண்டு அவர் தொடர்பான கேள்விகளாக கேட்டாராம் பிரயாகா. ஷபியும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் பதில் சொல்வாராம். ஒருகட்டத்தில் திலீப் வந்து உண்மையை சொன்னபின் தான் பிரயாகாவிற்கு தன்னுடைய தவறு தெரியவந்ததாம்.
ராம்லீலா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஒரு பழைய பாம் கதா என்கிற படத்தில் நடித்து வருகிறார் பிரயாகா மார்ட்டின். இயக்குனர் ஷபி தான் இந்தப்படத்தை இயக்கிவருகிறார்.