அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சினிமாவில் பெண் இயக்குனர்கள் நுழைவதே அரிதான விஷயம். அதிலும் ரசிகர்கள் விரும்பும் வெற்றிப்படங்களை கொடுத்து சாதிப்பது இன்னும் கஷ்டம்.. ஆனால் மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் பெங்களூர் டேய்ஸ் படம் மூலம் ரசிகர்களை வசியம் செய்தவர். ஏற்கனவே மஞ்சாடிக்குரு, அடுத்ததாக பெங்களூர் டேய்ஸ் படங்களை இயக்கிய இவரது டைரக்சனில் மூன்றாவது படமாக தற்போது கூடே என்கிற படம் இந்தவாரம் ரிலீஸாகியுள்ளது.
பிருத்விராஜ் - பார்வதி - நஸ்ரியா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ரசிகர்கள் தரப்பிலும் விநியோகஸ்தர்கள் தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை அடுத்து அஞ்சலி மேனன் அடுத்ததாக யார் படத்தை இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இளம் முன்னணி நடிகர்கள் அவரது டைரக்சனில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்களாம். இருந்தாலும் சரியான கதை அமைந்துவிட்டால் மோகன்லால், மம்முட்டி படங்களை இயங்குவதே தனது விருப்பம் என கூறியுள்ளார் அஞ்சலி மேனன்.