ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகையர் திலகம் படத்தில் மறைந்த நடிகை சாவித்ரி கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் பலருடன் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர், ஏற்கனவே தான் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை திடுமென உயர்த்தி விட்டதாக தகவல் பரவியது.
இது குறித்து நடிகர் கீர்த்தி சுரேஷ், விளக்கமளித்து கூறியதாவது: பணம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு நான் நடிக்க வரவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து பெயரையும்; புகழையும் ஈட்ட வேண்டும் என்பது மட்டும் தான், இப்போதைக்கு என்னுடைய ஒரே இலக்கு. அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறேன்.
நல்ல மார்கெட் இருக்கும் போது எந்தத் துறையானாலும் அதில் பணத்தை ஈட்டி விட வேண்டும் என்று பொதுவாக சொல்வார்கள்; எல்லோரும் அதையே செய்வார்கள். ஆனால், அதில் எனக்கு நாட்டம் கிடையாது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அது சிறிதானாலும், நிறைவாக கிடைத்தாலே போதும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.