தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கியூப் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரி தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியது. 50 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நடந்தது. குறைந்த கட்டணத்தில் படங்களை திரையிட தயாரிப்பாளர் சங்கம் புதிய நிறுவனம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தயாரிப்பாளர் சங்க ஆதரவுடன் மைக்ரோ ப்ளெக்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே முதன் முதலில் தயாரிப்பாளர்கள் தங்களுக்கென மாஸ்டரிங் யூனிட்டை உருவாக்கியிருப்பது இதுதான் முதல் முறை. அதற்கு உதவியாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், மார்ட்டின் குருஷ் கம்பெனிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மூன்று மாதத்திற்கு முன் தமிழ் திரைப்பட துறையில் ஏற்பட்ட வேலை நிறுத்தத்தின்போது விரைவில் தமிழ் திரைப்பட துறையில் மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டது. இன்று அது முதல் படி எடுத்து வைக்கப்பட்டுள்ளது. 60 நாட்களில் உலக தரத்திற்கு இணையாக அனைத்து விதமான தொழில்நுட்பத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருக்கும் திரையரங்கிற்கும் உடுமலை சண்முகா திரையரங்கிற்கும் டெலிவரி செய்து சோதனை சொய்யப்பட்டது.
இது ஒரு நல்ல நிறுவனம் முதல் அடி எடுத்து வைத்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தன் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான முதல் ஆரம்பம். இதன் விலை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சரியான விலையில் தரமான பொருளை தர அந்த நிறுவனம் முன் வந்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முயற்சியை இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரைப்பட தயாரிப்பாளர்கள் தனக்கென சொந்தமாக மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்கப்படலாம். இது யாருக்கும் எதிராக ஆரம்பிக்கபட்டதல்ல.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி பேசினார்.