Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோச்சடையான் விவகாரத்தில் லதா ரஜினிக்கு தொடர்பில்லை : தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

16 ஜூலை, 2018 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Kochadaiyaan-issue-:-Global-Media-explanation

ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் என்டர்டயின்ட்மென்ட் நிறுவனம், ஆட் ப்யூரோ என்ற நிறுவனத்திடம் கடன் பெற்றது. இந்த கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தார். கடனை திருப்பிச் செலுத்தாததால் ஆட் பியூரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடனை மீடியா ஒன் குளோபல் நிறுவனம் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் உத்தரவாத கையெழுத்திட்ட லதா ரஜினி திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் லதா ரஜினிகாந்திற்கும், மீடியா ஒன் குளோபல் நிறுவனம் வாங்கிய கடனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்று மீடியா ஒன் குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:


தற்போது மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம், லதா ரஜினிகாந்த் மற்றும் அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கும் இடையிலான சர்ச்சைகள் பற்றி தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகள் வெளியாவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.


இந்த சர்ச்சைகள் அனைத்தும் மீடியாஒன் குளோபல் நிறுவனம் மற்றும் அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் மூலம் தொடங்கியது. அந்த உடன்படிக்கைகளின் படி அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திடமிருந்து கடன் தொகையாக ரூ. 20 கோடி மீடியா ஒன் நிறுவனம் பெற்று கொண்டது. கோச்சடையான்' போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக அத்தொகை கடனாக வாங்கியது மீடியாஒன் நிறுவனம். மேலே கூறப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் கீழ் லதா ரஜினிகாந்த் உறுப்பினர் இல்லை.


மேலும் இந்த உடன்படிக்கைகளின் படி அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கு 'கோச்சடையான்' திரைப்படத்தை தமிழ் நாட்டில் மட்டும் விநியோகிப்பதற்கான முழு உரிமையும், உடன் குறைந்தபட்ச உத்திரவாத லாபத்தை கடன் தொகைக்கு ஈடாக எடுத்துக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. உடன்படிக்கைகளின் படி நிர்ணயிக்கப்பட்ட ரூ. 20 கோடியில் ரூ.10 கோடி மட்டுமே முன்பணமாக கொடுத்தது அட்-ப்யூரோ நிறுவனம். இதன் காரணமாக 'கோச்சடையான்' திரைப்படம் வெளியாவதில் பல வாரங்கள் தாமதமானது. இன்றைய தேதிபடி மீடியாஒன் நிறுவனம் ரூ. 10 கோடி கடன் தொகையில், ரூ.9.2 கோடி உடன்படிக்கைகளின் படி சரிவர கட்டியுள்ளது. மேலும் ரூ. 80 லட்சத்தை உடன்படிக்கைகளின் படி கட்டி முடிக்கவும் உறுதியாய் உள்ளது.


உடன்படிக்கைகளின் ஒப்பந்த மீறலாய், அட்-ப்யூரோ நிறுவனம் கடிதம் வழி கடந்த 11.11.2014 அன்று கோரியது. மீடியாஒன் நிறுவனம் மொத்த தொகையாக ரூ.10 கோடியும், வட்டியாக ரூ.4.30 கோடியும், 6 மாத கால கணக்கின்படி, ஓராண்டிற்க்கான 80% வட்டி விகிதத்தை கட்டுமாறு கோரப்பட்டது. இது உடன்படிக்கைகளின் கீழ் ஒவ்வாத கோரிக்கை மட்டுமின்றி விதிமீறலாகும். இது தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக, அட்-ப்யூரோ நிறுவனம், மீடியாஒன் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்த்துக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளது. மேலும் அட்-ப்யூரோ நிறுவனம் பொது வழக்குகளை தொடர்ந்துள்ளது. மேலும் மீடியாஒன் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்த் மீது பொய்யாய் புனையப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் புகார் கொடுத்துள்ளது. லதா ரஜினிகாந்த், மீடியாஒன் நிறுவனத்தின் பங்குதாரரோ நிர்வாக இயக்குனரோ இல்லை.


அட்-ப்யூரோ நிறுவனத்தின் கோரிக்கைக்கு மீடியாஒன் நிறுவனம் மட்டுமே பொறுப்பாகும் என்பது தெளிவுப்படுத்தபடுகிறது. மீடியாஒன் நிறுவனம் விவகாரங்களில் லதா ரஜினிகாந்த்துக்கு எந்த பங்கும் இல்லை. மேலும் அட்-ப்யூரோ நிறுவனத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்பி, லதா ரஜினிகாந்த்துக்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களையும் பணி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in