அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
மலையாள திரையுலக நடிகர் சங்கம் (AMMA) தற்போது நடிகர் திலீப் பிரச்சனையால் கலகலத்து போயுள்ளது.. நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறைசென்ற அவரை எப்படி மீண்டும் சங்கத்தில் சேர்க்கலாம் என ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன்,கீத்து மோகன்தாஸ் ஆகியோர் சங்கத்திலிருந்து விலகியுள்ளனர். இந்தநிலையில் நடிகை அனுமோல் என்பவரும் நடிகர்சங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.
இவர் மலையாளி என்றாலும் அறிமுகமானது தமிழில் தான். தமிழில் திலகர் மற்றும் ஒருநாள் இரவில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன்பின் மலையாளத்திலேயே செட்டிலாகிவிட்ட இவர், மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகியபின் தற்போது சுதந்திரமாக உணர்வதாக கூறினாலும் இவர் விலகியதற்கான காரணம் திலீப் பிரச்சனை இல்லையாம்.
"நடிகர் சங்கத்தில் இருக்கும்போது வெவ்வேறு இடங்களில் இருந்து உத்தரவுகள் வந்தன. நான் யாருடன் நடிக்க விரும்பவில்லையோ, யார் படத்தில் பணியாற்ற விரும்பவில்லையா அவர்களுடன் இணைந்து வேலைபார்க்குமாறு நிர்பந்திக்கப்பட்டேன். அதனால்தான் சங்கத்தில் இருந்து விலகியுள்ளேன். இப்போது நான் நடிகர்சங்கத்திலும் இல்லை.. அதற்கு எதிராக குரல்கொடுத்து வரும் சினிமா பெண்கள் நல அமைப்பிலும் சேர விரும்பவில்லை" என காரணம் கூறியுள்ளார் அனுமோல்.