தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இப்போதுள்ள இளம் இயக்குனர்கள் தங்களது ஆரம்பகால படங்களில் கூட இருந்தவர்களையும், தங்களது படங்களில் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தவர்களையும் தங்களது அடுத்தடுத்த படங்களிலும் நல்ல கேரக்டர்கள் கொடுக்கின்றனர். அந்தவகையில் பா.ரஞ்சித்தை போல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் தற்போது ரஜினி படத்தில் தனது ஆஸ்தான நடிகர்களான விஜய்சேதுபதியையும் பாபி சிம்ஹாவையும் இணைத்துள்ளார் என்பது தெரிந்த விஷயம் தான்..
மேலும் இந்தப்படத்தில் அஞ்சலியும் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறாராம். கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் இந்த மூன்றுபேரும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பதும் அதில் அஞ்சலியின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் அவரின் ஆஸ்தான இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இருந்தாலும், ரஜினியின் முந்தைய இரண்டு படங்களில் அவர் தொடர்ந்து பணியாற்றிவிட்டார் என்பதால் அவரை மட்டும் விட்டுக்கொடுத்துவிட்டு அனிருத்தை இணைத்துக்கொண்டுள்ளார்.