ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், சமந்தா, அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் மே 11ம் தேதி வெளிவந்த 'இரும்புத் திரை' நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியைப் பெற்றது. விஷால் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூலைப் பெற்ற படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இப்படம் தெலுங்கிலும் 'அபிமன்யுடு' என்ற பெயரில் வெளியாகி சுமார் 10 கோடி வரை லாபத்தைக் கொடுத்தது.
இப்போது இந்தப் படத்தின் இரு மொழிகளின் மொத்த வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 கோடி வசூலைப் பெற்றுள்ள இந்தப் படம் 16 கோடி வரை லாபத்தைக் கொடுத்துள்ளது. மற்ற மாநிலங்களில் தெலுங்கு உட்பட 20 கோடி வசூலித்து இந்தியாவில் மட்டும் வசூலாக 50 கோடியைக் கடந்துள்ளது. வெளிநாடுகளில் சுமார் 10 கோடியை வசூலித்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவற்றின் மூலம் சுமார் 15 கோடி வரை கிடைக்கும். மற்ற உரிமைகளையும் சேர்த்தால் மொத்தமாக 80 கோடிக்கும் மேல் இந்தப் படம் மூலம் வருவாய் கிடைத்துள்ளது என்கிறார்கள்.
விஷாலின் இதற்கு முந்தைய பெரிய வசூல் படமாக 'சண்டக்கோழி' படம்தான் இருந்தது. அந்த வசூலை 'இரும்புத்திரை' முறியடித்துள்ளது. 'இரும்புத்திரை' வசூலை அக்டோபர் 18ல் வெளிவர உள்ள 'சண்டக்கோழி 2' படம் முறியடிக்குமா என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பு.