பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'பாகுபலி 2' படத்தின் பிரம்மாண்ட வெற்றி, அபரிமிதமான வசூலுக்குப் பிறகு ராஜமௌலி ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். ஆனால், இந்தப் படத்திற்காக இதுவரை எந்த ஒரு கதையும் முடிவு செய்யப்படவில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களான ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இணைந்து நடிப்பதால் படத்தின் கதை மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என ராஜமௌலி எதிர்பார்க்கிறாராம். இதற்காக அவருடைய அப்பா விஜயேந்திர பிரசாத், மேலும் சில எழுத்தாளர்கள் அமர்ந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் அவர்களால் இன்னும் ஒரு சிறந்த கதையை உருவாக்க முடியவில்லையாம்.
இந்தப் படத்தை தெலுங்கில் மட்டுமே எடுக்க ராஜமௌலி திட்டமிட்டிருந்தாலும், படத்தை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட வசதியாக அதற்கும் பொதுவான கதையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாராம். அதனால், படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போகும் என்கிறார்கள்.