மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சண்டக்கோழி 2'. 2005-ம் ஆண்டில் வெளிவந்த முதல் பாகத்திற்குப் பிறகு 13 வருடங்கள் கழித்து இந்த இரண்டாம் பாகம் அக்டோபர் 18ம் தேதியன்று வெளியாக உள்ளது. படத்தை ஒரே சமயத்தில் தெலுங்கிலும் வெளியிட உள்ளார்கள்.
விஷால் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'இரும்புத் திரை' படம் தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் வெளியாகி 10 கோடிக்கும் மேல் லாபத்தைக் கொடுத்துள்ளது. அதனால், 'சண்டக்கோழி 2' படத்தை வாங்கவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும், முதல் பாகமும் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றதும் ஒரு காரணம்.
அதே சமயம், 'சண்டக் கோழி 2' படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த 'மகாநதி' படம் கீர்த்திக்கும் தெலுங்கில் பெரிய வரவேற்பைக் கொடுத்துள்ளது. இப்படி சில காரணங்களால் 'சண்டக் கோழி 2' படத்தை போட்டி போட்டு வாங்கி தெலுங்கில் வெளியிடுகிறார் பிரபல தயாரிப்பாளர் தாகூர் மது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்து வெளிவந்த 'தாகூர்' படத்தைத் தயாரித்ததால் மது, தாகூர் மது-வாக மாறிவிட்டார். கடந்த வருடம் மகேஷ் பாபு நடித்து வெளிவந்த 'ஸ்பைடர்' படத்தைத் தயாரித்தவரும் இவர் தான் என்பது கூடுதல் தகவல்.