பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சமீபத்தில் தான் டார்ஜிலிங்கில் ஒரு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்கள். ரஜினி படத்தை இயக்குகிறார் என்கிறபோதே விறுவிறுப்பு எகிறியது. அதேநேரம் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற இளைய தலைமுறை கலைஞர்கள் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் தான் மலையாள நடிகர் பஹத் பாசிலும் இந்த படத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளியானது. தற்போது மணிரத்னம், தியாகராஜன் குமாரராஜா ஆகியோரது டைரக்சனில் நடித்து வரும் பஹத் பாசில், கார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை தான். ஆனால் இந்த தகவலில் சிறிதும் உண்மையில்லை என்று மறுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.