ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மோகன்லாலை வைத்து, தான் இயக்கும் லூசிபர் படத்தின் படப்பிடிப்புக்காக சில இடங்களில் சிறப்பு அனுமதி கேட்டு சமீபத்தில் தான் கேரளா சுற்றுலா துறை அமைச்சரை சந்தித்திருந்தார் நடிகர் பிருத்விராஜ். இந்தநிலையில் நடிகர் மோகன்லாலும் கலாசார விவகாரங்கள் துறை அமைச்சர் ஏ.கே.பாலனை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மோகன்லால் அவரை சந்தித்தது லூசிபர் படத்திற்காக அல்ல.
சமீபத்தில் மலையாள நடிகர் சங்க தலைவராக மோகன்லால் பதவி ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து நடந்த பொதுக்குழுவில் நடிகர் திலீப்பை மீண்டும் சேர்ப்பதாக எடுக்கப்பட்ட முடிவிற்கு நடிகைகள் தரப்பிலிருந்து சில எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த விவகாரத்தில் ஒரு சில அமைச்சர்களும் மோகன்லாலுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இது தொடர்பாக சில விளக்கங்களை அளிப்பதற்காகவும் சில வேண்டுகோள்களை வைப்பதற்காகவுமே அமைச்சர் ஏ.கே.பாலனை மோகன்லால் சந்தித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது மோகன்லாலுக்கு ஒரு நினைவு பரிசும் ஒரு புத்தகமும் அன்பளிப்பாக வழங்கினார் அமைச்சர் ஏ.கே.பாலன்.