தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளத்து பெண் மிருதுளா முரளி. கண்களும் கவிபாடுதே படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்தார். தொடர்ந்து சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படத்தில் நாயகியாக நடித்தார்.
அழகும், திறமையும் இருந்தும் படங்கள் வெற்றி பெறாததால் வாய்ப்புகள் இல்லை. இதனால் சொந்த மாநிலம் சென்றவர் அங்கு மலையாள படங்களில் நடித்தார். ஆனாலும் தமிழில் தவறவிட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்தார்.
தற்போது, ரா ராபுரம், பிஸ்தா, உலகம் விலைக்கு வருது படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் வாய்ப்பு கேட்டுச் செல்லும்போது அவர், மிருதுளாவை சிபாரிசு செய்த படம் மணியக்காரர் குடும்பம். தம்பி ராமய்யா இயக்கி தயரிக்கும் இந்தப் படத்தில் தம்பிராமய்யாவின் மகன் உமாபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். எந்தொரு பாக்கியம் என்ற மலையாளப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் சுறுசுறுப்பாகியிருக்கும் மிருதுளாவை மணியக்கரார் குடும்பம் கைதூக்கி விடுமா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.