டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளத்து பெண் மிருதுளா முரளி. கண்களும் கவிபாடுதே படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்தார். தொடர்ந்து சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படத்தில் நாயகியாக நடித்தார்.
அழகும், திறமையும் இருந்தும் படங்கள் வெற்றி பெறாததால் வாய்ப்புகள் இல்லை. இதனால் சொந்த மாநிலம் சென்றவர் அங்கு மலையாள படங்களில் நடித்தார். ஆனாலும் தமிழில் தவறவிட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்தார்.
தற்போது, ரா ராபுரம், பிஸ்தா, உலகம் விலைக்கு வருது படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் வாய்ப்பு கேட்டுச் செல்லும்போது அவர், மிருதுளாவை சிபாரிசு செய்த படம் மணியக்காரர் குடும்பம். தம்பி ராமய்யா இயக்கி தயரிக்கும் இந்தப் படத்தில் தம்பிராமய்யாவின் மகன் உமாபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். எந்தொரு பாக்கியம் என்ற மலையாளப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் சுறுசுறுப்பாகியிருக்கும் மிருதுளாவை மணியக்கரார் குடும்பம் கைதூக்கி விடுமா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.