மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கேரளத்து பெண் மிருதுளா முரளி. கண்களும் கவிபாடுதே படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்தார். தொடர்ந்து சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படத்தில் நாயகியாக நடித்தார்.
அழகும், திறமையும் இருந்தும் படங்கள் வெற்றி பெறாததால் வாய்ப்புகள் இல்லை. இதனால் சொந்த மாநிலம் சென்றவர் அங்கு மலையாள படங்களில் நடித்தார். ஆனாலும் தமிழில் தவறவிட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்தார்.
தற்போது, ரா ராபுரம், பிஸ்தா, உலகம் விலைக்கு வருது படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் வாய்ப்பு கேட்டுச் செல்லும்போது அவர், மிருதுளாவை சிபாரிசு செய்த படம் மணியக்காரர் குடும்பம். தம்பி ராமய்யா இயக்கி தயரிக்கும் இந்தப் படத்தில் தம்பிராமய்யாவின் மகன் உமாபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். எந்தொரு பாக்கியம் என்ற மலையாளப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் சுறுசுறுப்பாகியிருக்கும் மிருதுளாவை மணியக்கரார் குடும்பம் கைதூக்கி விடுமா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.