டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி. கேரளாவைச் சேர்ந்த இவர் பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, மாயாண்டி குடும்பத்தார், குற்றம் 23, விசாரணை, நேபாளி உள்பட பல படங்களில் நடித்தார். ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் கடவுள் முருகன், கேளடி கண்மணி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவருக்கு சமீபத்தில் வாட்ஸப் மூலமாக, ஒருவர் பாலியல் சீண்டல் தரும் வகையில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் முக்கிய விஐபிக்களுடன் டேட்டிங் சென்றால் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றும் கூறி ஜெயலட்சுமிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி, அந்த நபரை வாட்ஸப்பில் இருந்து பிளாக் செய்துவிட்டார். எனினும், வேறு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து மீண்டும் இத்தகைய குறுஞ்செய்தி அவருக்கு அனுப்பப்பட்டுளளது. இதுகுறித்து ஜெயலட்சுமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதுபற்றி, விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜெயலட்சுமியை பாலியல் தொழிலுக்கு அழைத்த வளசரவாக்கத்தை சேர்ந்த முருகப்பெருமான், கவியரசன் என்ற இருவரை கைது செய்துள்ளனர்.
இதற்கு நன்றி தெரிவித்து ஜெயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''என் புகாரை ஏற்று பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்காக சென்னை போலீசாருக்கு நன்றி. நடிகைகளாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். நாங்களும் சராசரி மனிதர்கள்தான். பாலியல் தொழில் செய்வதற்காக நாங்கள் நடிக்க வரவில்லை. நடிப்பு ஒரு தொழில். இதனை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடிகைகளை பார்த்து யாரும் தப்பாக நினைத்துக் கொள்ள கூடாது என்பதற்காகவே இந்த விசயத்தை கமிஷனர் வரை கொண்டு சென்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.