பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன். அவர் பேசியதாவது... மூட நம்பிக்கையை ஓழிக்க அரசியலுக்கு வந்ததாக நினைத்தால் தவறு. ஏழ்மை, ஊழலை ஒழிக்க தான் வந்துள்ளதாக நினைக்கிறேன். அரசியலில் பலரது உதவிகள் தேவைப்படுகின்றன.
ஆழ்வார்பேட்டை ஆண்டவா என தொண்டர்கள் அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன். சத்துணவு முட்டை விநியோகத்தில் ஊழல் என்று ஓராண்டுக்கு முன்னரே கூறினோம். தமிழக அரசு நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தாவில் நிறைய தண்ணீர் உள்ளது. பால் இல்லை. மக்கள் நீதி மையத்தில் இருக்கும் அனைவரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. ஒரே நேரத்தில் சட்டசபைக்கும், பார்லிமென்டிற்கும் தேர்தல் நடத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.