தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூர்யாவின் '2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தையடுத்து சூர்யா- கார்த்தி இருவரையும் வைத்து ஒரு படத்தை பாண்டிராஜ் இயக்கினாலும் ஆச்சர்யமில்லை, இந்த தகவலை கடைக்குட்டி சிங்கம் படத்தின் ஹீரோவான கார்த்தியே சூசகமாக தெரிவித்துள்ளார்.
'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் புரமோஷனுக்காக ஃபேஸ்புக்கில் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடினார் கார்த்தி. அப்போது, 'சூர்யாவுடன் இணைந்து எப்போது நடிக்கப்போகிறீர்கள்?' என ஒரு ரசிகர் கேட்டதற்கு, “அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. எங்கள் இருவருக்காகவும் சேர்த்து பாண்டிராஜ் சார் ஒரு கதை எழுதி, அது நன்றாக அமைந்தால் நிச்சயம் இருவரும் இணைந்து நடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, “எனக்கே என் அண்ணனை இயக்கும் ஆசை இருக்கிறது. எதிர்காலத்தில் எப்படி அமையப் போகிறது என்பதைப் பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார் கார்த்தி. ரேக்ளா ரேஸில் வெற்றிபெற்ற கார்த்திக்கு பரிசு கொடுக்கும் சிறப்பு விருந்தினராக கடைக்குட்டி சிங்கம் படத்தில் சூர்யா நடித்துள்ளார்.
சூர்யா - கார்த்தி இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே இருவரின் ரசிகர்களும் ஆசைப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தப் படம் ஓரளவுக்கு அந்த ஆசையைக் நிறைவேற்றி வைத்துள்ளது.