டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூர்யாவின் '2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தையடுத்து சூர்யா- கார்த்தி இருவரையும் வைத்து ஒரு படத்தை பாண்டிராஜ் இயக்கினாலும் ஆச்சர்யமில்லை, இந்த தகவலை கடைக்குட்டி சிங்கம் படத்தின் ஹீரோவான கார்த்தியே சூசகமாக தெரிவித்துள்ளார்.
'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் புரமோஷனுக்காக ஃபேஸ்புக்கில் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடினார் கார்த்தி. அப்போது, 'சூர்யாவுடன் இணைந்து எப்போது நடிக்கப்போகிறீர்கள்?' என ஒரு ரசிகர் கேட்டதற்கு, “அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. எங்கள் இருவருக்காகவும் சேர்த்து பாண்டிராஜ் சார் ஒரு கதை எழுதி, அது நன்றாக அமைந்தால் நிச்சயம் இருவரும் இணைந்து நடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, “எனக்கே என் அண்ணனை இயக்கும் ஆசை இருக்கிறது. எதிர்காலத்தில் எப்படி அமையப் போகிறது என்பதைப் பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார் கார்த்தி. ரேக்ளா ரேஸில் வெற்றிபெற்ற கார்த்திக்கு பரிசு கொடுக்கும் சிறப்பு விருந்தினராக கடைக்குட்டி சிங்கம் படத்தில் சூர்யா நடித்துள்ளார்.
சூர்யா - கார்த்தி இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே இருவரின் ரசிகர்களும் ஆசைப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தப் படம் ஓரளவுக்கு அந்த ஆசையைக் நிறைவேற்றி வைத்துள்ளது.